Posts

Showing posts from August, 2022

இடைக்கால பல்லவ மன்னன் | முதலாம் குமாரவிஷ்ணு | Middle Pallavas | Kumaravisnu I

Image
  தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்! இடைக்கால பல்லவர்கள் முதலாம் குமாரவிஷ்ணு (கி. பி. 350 - 367) முதலாம் சிவஸ்கந்தவர்மனைத் தொடர்ந்து அவனது மூத்த மகன் புத்தவர்மன் அரசானாகவில்லை எனத் தெரிகிறது . ஏனென்றால் , புத்தவர்மனின் மனைவி சாருதேவி தன்னை யுவமகாராஜாவின் மனைவி என்றும் புத்தயன்குராவின் தாய் என்றும் அறிவித்து குணபதேய செப்பேட்டை அளித்துள்ளாள் . இந்த செப்பேட்டில் சொல்லப்பட்ட தானம் அரசனின்   ஆட்சியாண்டில் வழங்கப்பட்டது என்ற தகவல் இல்லை . தனது , புகழையும் , ஆயுளையும் அதிகரிப்பதற்காக தானம் செய்ததாக   சொல்வதிலிருந்து இவள் கணவன் அரசனாக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது . ஆகவே முதலாம் சிவஸ்கந்தவர்மனின் இரண்டாம் மகன் முதலாம் குமாரவிஷ்ணு பதவிக்கு வந்தான் . இவனது பேரனின் மகனான மூன்றாம் ஸ்கந்தவர்மனின் ஓங்கோடுச் செப்பேடு , இவனை அஸ்வமேத யாகம் செய்தவன் என்று புகழ்கிறது . முதலாம் குமாரவிஷ்ணு ஆட்சி காலத்திலேதான் காஞ்சி சோழர்கள் ஆட்சியிலிருந்து பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தது என்ற கருத்தும் நிலவுகிற...

முற்கால இரண்டாம் மன்னன் | முதலாம் சிவஸ்கந்தவர்மன் | Early Pallavas | Shivaskandavarman I

Image
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்! இன்று நாம் தெரிந்து கொள்ள போகும் மன்னன் முற்கால பல்லவர்களில் இரண்டாம் மன்னனா சிவஸ்கந்தவர்மன் . முதல் மன்னனா சிம்மவர்மனை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் - ஐ கிளிக் செய்யவும் .👉 https://blogwriterdeepa.blogspot.com/2022/08/blog-post.html சிவஸ்கந்தவர்மன்   ( முற்காலம் )   ( கி . பி . 330-350) சிவஸ்கந்தவர்மன்   என்பவன் முற்காலப் பல்லவர் மன்னர்களுள் அறியப்படும் இரண்டாம் பல்லவ மன்னனாவான் . சிம்மவர்மனின் மகன் . யுவமகாராஜனாயிருக்கும்போதே தந்தைக்கு உதவியாக போர்களில் கலந்து கொண்டவன் என மயிதவோலுச் செப்பேடு ( கி . பி .305) சொல்கிறது . இந்த செப்பேடு வழங்கப்பட்ட 25 ஆண்டுகள் கழித்துதான் சிவஸ்கந்தவர்மன் அரச பதவிக்கு வந்திருக்கிறான் .  இவன் தன் தந்தையின் காலத்தில் இளவரசனாகக் காஞ்சியில் இருந்து , பல்லாரி ஜில்லாவில் உள்ள ‘ விரிபரம் ’ என்ற கிராமத்தை மறையவர் இருவர்க்குத் தானமாக விட்டான் . இச்செய்தியைக் கூறுவதே ‘ மயிதவோலுப் பட்டயம் ’ என்ற முதல் பிராக்ருதப் பட்டயமாகும்....

முற்கால முதல் மன்னன் | சிம்மவர்மன் | Early Pallavas | Simhavarman

Image
தினமும் ஒரு பல்லவ மன்னனை பற்றி தெரிந்துகொள்வோம்! பல்லவர்களை   மூன்று கால பல்லவர்களாக   வகைப்படுத்தலாம் : முற்கால பல்லவர்கள்   இடைக்கால பல்லவர்கள்   பிற்கால பல்லவர்கள் முதலில் முற்கால பல்லவர்களை   பற்றி   காண்போம்   பல்லவர்களின் ஆரம்பகால வரலாற்றை முதன்முதலாகத் தெரிவிப்பது வேலூர்ப்பாளையம் செப்பேடுதான் ( கி . பி .852) இச்செப்பேட்டில்தான் வீர்க்கூச்சன் என்பவன் நாகராஜன் மகளை மணந்து அரசாளும் உரிமையை பெற் றான்   என்று சொல்லப்பட்டுள்ளது . இவனது மகன் ஸ்கந்த சிஷ்யன் காஞ்சியிலிருந்த கல்விக்கூடத்தை சத்யசேனனிடமிருந்து கைப்பற்றிருக்கிறான் . பல்லவர்களின் மூன்றாம் அரசனான குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றி நிலைப்படுத்திக் கொண்டான் . இவன் மகன் புத்தவர்மன் , திருச்சி , தஞ்சை பகுதியில் ஆட்சியிலிருந்த முத்தரையர் , சோழர்களுக்கு வடக்கிலிருந்து வரும் தீ போல இருந்து பல்லவ ராஜ்யத்தை புத்தவர்மன் தஞ்சாவூர் வரை விரிவுபடுத்தியிருக்கிறான் . முதலாம் சிம்மவர்மன் ( முற்காலம் ) ( கி . பி .295-330) சரித்திரம் ஏற்ற...